Saturday, January 19, 2013

றிசானா ரபீக்கின் மரண தண்டனை இஸ்லாமிய சரியாவுக்கு உட்பட்டதா ?

ஆசிர் (சலபி)
இமாம் பல்கலை களகம்,
சவூதி அரேபியா.

றிசானா ரபீக்கின் மரண தண்டனை இஸ்லாமிய  சரியாவுக்கு உட்பட்டதா ?

இன்று உலகலா ரீதியில் சகோதரி றிசானா ரபீக்கின் மரண தண்டனை பற்றி பேசப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் அத்தண்டனையானது இஸ்லாமிய மார்க்க சட்டத்துக்கு அப்பார் பாட்டதாக நிரைவேற்றப்பட்டது என்று பல விதமாக பலரால் விமர்சிக்கப்படுகின்றது. இத்தண்டனையானது அண்னியர்கள் இஸ்லாத்தையும் இஸ்லாத்தின் அடிப்படைகளையும் விமர்சிப்பதற்கு ஒரு காரணமா மாற்றிக் கொண்டார்கள் என்பதை இஸ்லாத்தின் அடிப்படையில் நின்று யோசிக்காதவர்கள் புறிந்து கொள்ளாததுதான் கவலைக்கிடமானதாகும்.


    'றிசானா ரபீக்கின் மரண தண்டனையானது மனிதாபிமானம் மற்றும் இஸ்லாத்துக்கு அப்பாற் பட்டது' என்று உலமாக்களே விமர்சிக்கின்றார்கள். அவர்கள் முன் வைக்கும்; காரணங்களும் எம்முடைய பதிள்களும்.
 காரணங்கள்
1-    17 வயதுடைய சிறுமிக்கு மரண தண்டனை எப்படி கொடுப்பது?.
2-    ஏழை என்பதற்காக கொடுக்கப்பட்டது
3-    பனிப் பெண் என்பதற்காக.
4-    தீர விசாரணை செய்யாமல் கொடுக்கப்பட்டது.

இப்படி பல வாராக போலிக் காரணங்களை முன் வைக்கின்றார்கள்.

எம்முடைய பதில்.
    இறைவன் திருமறையில் ' நம்பிக்னை கொண்டோரே! பழிக்குப் பழி வாங்குவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது.' (அல் பகரா 178),  இன்றும்; இறைவன் கூறுகையில் ' அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்கை உள்ளது. (இச்சட்டதினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.' (அல் பகரா 179)
பொதுவாக பார்போமானால் இன்று அதிகமானவர்களின் ஆதரவானது றிசானா ரபீக்கின் பாக்கமாகவே காணப்படுகின்றது. ஆனால் இந்த இடத்தில் இரண்டு தாயினுடைய குழந்தைகள் கொள்ளப்பட்டுள்ளன என்பதை சிந்திக்க மறந்துவிடுகின்றார்கள். ஒன்று றிசானா ரபீக் மற்றயது காயித் பின் நாயிப் பின் ஜிஸ்யான் அல் உதைபி என்கின்ற உதைபியா கோத்திறத்தைச் சேர்ந்த நான்கு மாதக் குழந்தை.

இந்த இடத்தில் இரண்டு தாயினுடைய நிலமைகளையும் காவணிக்கப்பட வேண்டும். வெறுமினே எல்லோருடைய ஆதரவும்; ஒரு பக்கம் இருப்பதனால் நாமும் அதன் பக்கம் வளைந்து விடக் கூடாது. நடு நிலையாக நின்று தீர்ப்பு வளங்கவேண்டும். எங்களிடம் முழுமையான ஆதாரம் இல்லாவிடத்து அமைதி காப்பதே சிறந்தது. இதனையே இஸ்லாமும் வர வைக்கின்றது, வளியுறுத்தின்றது.

பதில் 1
17 வயது சிறுமிக்கு தண்டனை கொடுக்க முடியாது. என்பதனை மார்க்கம் முழுமையாக போதிக்ப்படாதவர்கள் மட்டும் தான் அப்படி வாதிட்டு பேசுவார்கள். 17 வயது என்பது சிறுமியை குறிக்கும் என் இஸ்லாம் விதித்த ஒரு விதிமுறையல்ல. இச்சட்டமானது 'யுனிசெப்' பினால் கொண்டு வரப்பட்டதாகும்.

இஸ்லாமியச் சட்டமானது பருவ வயதினை அடைதலாகும். ஒருவன் பருவ வயதை அடைந்து விட்டான் என்றால் அவன் மீது தொழுகை கடமையாகும். அதே போன்று மார்க்க விடயங்கள் அவன் மீது கடமையாகின்றது. ஆதற்கு மாற்றமாக நாம் இல்லை 17 வயதை தாண்ட வேண்டும் என்று வாதிடுவோமானால் இஸ்லாமிய மார்க்கம் பூரணமாக தெறியாதவர்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. அது மட்டுமல்ல நபி(ஸல்) அவர்கள் மீதும் நாம் குற்றம் சாட்டுகின்றோம் என்றும் கூறலாம். நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் 8 வயதிருக்கும் போது திருமணம் செய்தார்கள். அதே போன்று தன்னுடைய மகள் பாத்திமாவுக்கும் 14 வயதிருக்கும் போது திருமணம் செய்துவைத்தார்கள். பெரும் பாலான திருமணங்கள் நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் 14 அல்லது 15 வயதில் நடைபெற்றது. இதனை நாம் சிறுமிகளை திருமணம் வெய்து வைத்தார்கள் அல்லது சிறுமிகளை திருமணம் செய்தார்கள் என்று குற்றம் சாட்டுவோமா?;
இப்படிச் சொல்வோமானால் எமக்கும் மாற்று மதத்தினறுக்கும் இடையில் என்ன வேறுபாடு?
17 வயது என்கின்ற ஒரு சட்டம் இஸ்லாமிய மார்க்கத்தில் கிடையாது.

பதில் 2,3
ஏழை என்பதற்காகவோ அல்லது பனிப் பெண் என்பதற்காகவே இத்தண்டனை வளங்கப்பட வில்லை என்பதனை நன்றாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். றிசானா ரபீக்கின் விடயத்தில் சவூதி அரசாங்கம் தங்களால் முடிந்த அளவுக்கு இத் தண்டனையை நிறைவேற்றாமல் இருப்பதற்கு ஏதாவது காரணங்கள் இல்லையா? என்பதனை பார்ப்பதற்காகவே றிசானா ரபீக்க்கு கிட்டத்தட்ட 8 வருடங்கள் அதனை இழுத்தடித்தார்கள். சாதாரணமாக ஒரு மரண தண்டனைக்கு 3 மாதங்கள் மாத்திரமே சவூதி அரசாங்கத்தால் அவகாசம் கொடுக்கப்படடு;ம். ஆனால் அதற்கு மாற்றமாக 8 வருடகங்கள் ஏன் கொடுக்ப்பட்டது என்பதனை தீர ஆய்வு செய்பவர்கள் அறிந்து கொள்வார்கள்.
கடந்த வருடம் மட்டும் சவூதியில் 76 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. ஆனாhல் அம்மரண தண்டனைகள் றிசானா ரபீக்குக் கொடுத்த அவகாசம் போன்று கொடுக்கப்பட வில்லை என்பதனையும் நாம் தெறிந்து கொள்ள வேண்டும்.

அதே போன்று இன்று 'தாலா' என்கின்ற 2 வயது சிறுவன், 'மிஷாரி' என்கின்ற 5 மாத குழந்தைகளை கொலை செய்ததற்காக பணி பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் படவிருக்கின்றது. அதற்கும் 3 மாத காலங்களே அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. றிசானா ரபீக்கின் விடயத்தில் மாத்திம் ஏன் அவ்வாறு 8 வருடங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது?.

சவூதி அரேபிய மன்னர் அப்பதுள்ளாஹ் இப்னு அப்துல் அஸிஸ் அவர்கள் காயித்தின் குடும்பத்தாரிடம் கொலையாளியை மண்ணிக்கும் படியும் அதற்கு பதிலாக 30 இலட்சம் றியாழ் தருவதாகவும் பேசிய போது அதனை அத் தாய் மறுத்து விட்டால். அக் குடும்பத்தில் அவர்களுக்கு இன்னும் ஒரு நோய்யுற்ற மகன் இருக்கின்றான்.; நோயை குணப்படுத்தும் அளவிற்கு அவர்களிடம் போதிய வருமானம் கிடையாது. இந் இடத்தில் நாம் ஒன்றை யோசிக்க கடமைப் பட்டுள்ளோம். அதாவது எந்தளவுக்கு கடும் கல் நெஞ்சம் கொண்டவனாக இருந்தாலும் பணம் என்று வருகின்ற போது மணம் இரங்கத்தான் செய்வான் ஆனால் அத் தாய் அதனை மறுத்துவிட்டதற்கு காரணம் என்ன?. தன்னுடைய குழந்தை கொள்ளப்பட்டு விட்டதே என்கின்ற மண வேதனை இதனை யாரும் கவனிக்காமல் பல விதமாக விமர்சிப்பது ஏன்?
துற்போது இளவரசராக இருக்கின்ற சல்மான் அவர்கள் அக்குடும்பத்தாரிடம் உங்களுடைய நோய்;யுற்ற குழந்தையை ஜேர்மன் கொண்டு சென்று குணப்படுத்தி வருகின்றேன். அதற்கான அனைத்து பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறியும் கூட அத்தாய் மறுத்துவிட்டாள். இதனை நாம் ஏன் சிந்திக்க மறந்து விட்டோம்.???

பதில் 4
தீர விசாரணை செய்யப்படவில்லை என்கின்ற குற்றம். 13 உயர் நீதிபதிகள் விசாரனை செய்யாமல் மரண தண்டணை சவூதி அரசாங்கத்தால் நிறைவேற்றப்படமாட்டாது என்பதனை பலர் அறியாதிருக்கின்றார்கள். அதே போன்று றிஸானாவிடம் கேட்க்ப்பட்ட போது அவர்  ' நான் பால் கொடுக்கும் போது பால் தொண்டயை அடைத்துக் கொண்ட போது கழுத்தை தடாவி விட்டேன்' என்று கூறினார். மூன்று விடுத்தம் கேட்டக்பட்டபோதும் அவர் அவ்வாரே பதிலளித்தார். குழந்தையின் மரணம் அவரின் முன்னிலையிலேயே நடை பெற்றுள்ளது.

இதனை கேள்வியுற்ற இலங்கை அரசாங்கம் மொழிபேற்பாளர் தவறு விட்டிருக்கலாம் என்று விமர்சித்த போது மொழிபேற்பாளர் மாற்றப்பட்டார். அபபோதும்; அதே போன்று தான் றிசானா ரபீக்கின் பதில் காணப்பட்டது. அதன் பின்னர் காயிதின் பிரேரணை  அத் தவாதிமியில் உள்ள பிரேர பரிசோதனை இடத்ததுக் கொண்டு செல்லப்பட்டது. பரிசோதனையின் முடிவு குழந்தை கழுத்து நெறிக்கப்பட்டு கொள்ளப்பட்டுள்ளது என கிடைக்கப் பெற்றது.
இப்படி பலவாரா தீர விசாரணை செய்ததின் பிரகே இஸ்லாமிய அடிப்டையில், எவருடைய தலையீடுதலும் இல்லாமல் சகோதரி றிசானா ரபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

என்னுடைய ஆய்வின் படி றிசானா ரபீக்குக் இஸ்லாத்தின் அடிப்படையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவூதி அரசாங்கத்தை விமர்சிப்பது வேறு, இஸ்லாமிய மார்க்கததை விர்சிப்பது வேறு என்பதனை அனைவரும் நன்றாக புறிந்து கொள்ள வேண்டும். எப்போதும் நாம் மார்க்த்தை விமர்சிப்பதற்கு துணை போகக் கூடாது.

றிசானா ரபீக் வெளிநாடு செல்வதற்கான காரணம் என்ன? வீடு கட்ட வேண்டும் அதே போன்று வருமை தங்கள் குடும்பத்தை ஆட்கொண்டுள்ளது என்கின்ற பல காரணங்களுக்காக. இதெற்கௌளாம் அடிப்படைக் காரணம் சீதனம் எனும் ஆட் கொள்ளி நோயாகும் இதனை முதல் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள். அதுவே மகா வெற்றியாகும்.

அள்ளாஹ் மிக அறிந்தவன்.



   

0 comments:

Post a Comment